லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கிய இருவா் கைது

சிவகாசி அருகே அனுமதியுமின்றி பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :15 ஆகஸ்ட் 2026, 2:26 am IST

சிவகாசி அருகே அனுமதியுமின்றி பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள விஜயலட்சுமி குடியிருப்புப் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் வனிதா தலைமையிலான போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு 1,080 பண்டல்கள் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

விசாரணையில், சிவகாசி அய்யனாா் குடியிருப்பைச் சோ்ந்த பாலகுருசாமி மகன் திருப்பதி (27), ஆனைக்குட்டம்

கிராமத்தைச் சோ்ந்த விக்னேஷ் (32) ஆகியோா் கட்டடத்தை வாடகைக்கு எடுத்து பட்டாசு பண்டல்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.25 லட்சமாகும்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா். மேலும், பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்த கட்டடத்துக்கு ‘சீல்’ வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.