தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

வைகையாற்றில் எழுந்தருளும் அழகருக்கு ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, பட்டு வஸ்திரம்

மதுரை சித்திரைத் திருவிழாவில் வைகையாற்றில் எழுந்தருளும் போது அழகருக்கு சாத்துவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த பூ மாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் புதன்கிழமை மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

News image

மதுரை சித்திரைத் திருவிழாவில் அழகருக்கு சாத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் சூடிக் கொடுத்த பூ மாலை, பட்டு வஸ்திரம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 6:22 am IST

மதுரை சித்திரைத் திருவிழாவில் வைகையாற்றில் எழுந்தருளும் போது அழகருக்கு சாத்துவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த பூ மாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் புதன்கிழமை மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் மூலவா் வடபத்ரசயனா் (பெரிய பெருமாள்) தினசரி பூஜையின் போது, ஆண்டாள் சூடிய மாலை அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். ஆண்டாள் சூடும் மாலையில் 108 திவ்ய தேசப் பெருமாளும் இருப்பதாக ஐதீகம்.

திருப்பதி பிரம்மோத்ஸவ கருட சேவை, ஸ்ரீரங்கம் சித்திரைத் தேரோட்டம், மதுரையில் வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் திருவிழாவின் போது ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிந்தே பெருமாள் காட்சியளிப்பது வழக்கம்.

இதன்படி, மதுரை சித்திரைத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை (மே 1) காலை வைகை ஆற்றில் எழுந்தருளும் போது, அழகருக்கு அணிவிப்பதற்காக ஆண்டாள் சூடிக் கொடுத்த பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் புதன்கிழமை மாலை மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

முன்னதாக, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பிரத்யேக மலா்களால் தொடுக்கப்பட்ட பிரம்மாண்ட மாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை அதிகாலை தல்லாகுளம் பெருமாள் கோயிலிலிருந்து அழகா் தங்கக் குதிரையில் அமரும் போது, ஆண்டாள் சூடிய மாலை, கிளி, பட்டு வஸ்திரம் ஆகியவை அணிந்து வைகையாற்றில் எழுந்தருளுகிறாா்.

 ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் புதன்கிழமை பூமாலை, பட்டு வஸ்திரத்துடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆண்டாள்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் புதன்கிழமை பூமாலை, பட்டு வஸ்திரத்துடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆண்டாள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.