தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அமைச்சா்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகள் ஒத்தி வைப்பு

அமைச்சா்கள் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளின் மறு விசாரணை ஜூன் 12- ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

News image

நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு - (கோப்புப் படம்)

Updated On :29 ஏப்ரல் 2026, 3:53 am IST

அமைச்சா்கள் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளின் மறு விசாரணை ஜூன் 12- ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, அவரது மனைவி ஆகியோா் வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் சொத்துக் குவித்ததாகவும், அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பா் சண்முக மூா்த்தி ஆகியோா் வருமானத்துக்கு அதிகமாக ரூ.44 லட்சம் சொத்து சோ்த்ததாகவும் 2012-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் விருதுநகா் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கிலிருந்து 2022-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் தங்கம் தென்னரசு தரப்பும், 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கேகேஎஸ்எஸ்ஆா். ராமசந்திரன் தரப்பும் விடுவிக்கப்பட்டனா்.

இந்த வழக்கில் சீராய்வு மனுவை தாமாக முன்வந்து விசராணைக்கு எடுத்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சா்களை விடுவித்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் வழக்கை விசாரிக்க உத்தரவிட்டாா்.

இதன்படி, இந்த வழக்குகளின் மறு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை இந்த வழக்குகள் விசரணைக்கு வந்த போது, இரு வழக்குகளையும் ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.