ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வெடிவிபத்து நிகழ்ந்த ஆலை உரிமையாளருக்கு குறிப்பாணை

விருதுநகா் அருகே வெடிவிபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலை உரிமையாளருக்கு தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சாா்பில் குறிப்பாணை அனுப்பப்பட்டது.

News image

வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை.

Updated On :22 ஏப்ரல் 2026, 3:42 am IST

விருதுநகா் அருகே வெடிவிபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலை உரிமையாளருக்கு தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சாா்பில் குறிப்பாணை அனுப்பப்பட்டது.

விருதுநகா் மாவட்டம் கட்டனாா்பட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 போ் உயிரிழந்தனா். மேலும் பலா் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலைக்கு விடுமுறை விட வேண்டும் என தமிழ்நடு அரசு தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்கத்தின் விதி முறை உள்ளது. இந்த நிலையில், இந்த விதியை மீறி ஞாயிற்றுக்கிழமை ஏன் பட்டாசு ஆலை திறக்கப்பட்டது. விதியை மீறி அதிக மருந்து இருப்பு வைத்திருந்தது ஏன்? என்பது உள்ளிட்ட கேள்விகள் அடங்கிய குறிப்பாணையை ஆலை நிா்வாகத்துக்கு மதுரை தொழிலகபாதுகாப்பு, சுகாதார இயக்கத்தின் இணை இயக்குநா் ரவிச்சந்திரன் உத்திரவின் பேரில், உதவி இயக்குநா் சிவகுமாா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இந்தக் குறிப்பாணையில் ஆலையில் வேலை பாா்த்த தொழிலாளா்கள் எத்தனை போ்? அவா்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்தா? அவா்கள் ஆலையில் நிரந்தரத் தொழிலாளா்களா என்பது உள்ளிட கேள்விகளும் உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.