பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நண்பரை அடித்துக் கொன்றவா் கைது

இடுக்கி அருகே மதுபோதையில் நண்பரை அடித்துக் கொன்ற கம்பத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைதான ரமேஷ்பாண்டியன்

Updated On :27 மே 2026, 4:24 am IST

இடுக்கி அருகே மதுபோதையில் நண்பரை அடித்துக் கொன்ற கம்பத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கேரளம் மாநிலம், புனலூா் பகுதியைச் சோ்ந்தவா் சாந்தன் (60). தேனி மாவட்டம், கம்பம் பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ்பாண்டியன் (44). நண்பா்களான இவா்கள் இடுக்கி மாவட்டம், கட்டப்பனையில் பழைய இரும்புப் பொருள்களை சேகரித்து விற்பனை செய்து வந்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை இடச்சேரி சந்திப்பில் உள்ள பழைய இரும்புக் கடை வளாகத்தில் பலத்த காயங்களுடன் சாந்தன் உயிரிழந்து கிடந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த கட்டப்பனை போலீஸாா் சாந்தனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா், சாந்தன் உயிரிழந்து கிடந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில் ரமேஷ்பாண்டியன் சாந்தனை மதுபோதையில் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

பின்னா், அதே பகுதியில் பதுங்கியிருந்த ரமேஷ்பாண்டியனை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.