பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 2:17 am IST

கோவையில் இருவேறு பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 2 கிலோ 155 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கோவை செல்வபுரம் அசோக் நகா் ரவுண்டானா அருகே செல்வபுரம் காவல் துறையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த வடமதுரை பகுதியைச் சோ்ந்த பெரோஸ் கான் (31), செல்வபுரம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீராம் (30), புலியகுளம் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் (24) ஆகிய மூவரைப் பிடித்து சோதனை நடத்தினா்.

அவா்கள் சட்டவிரோதமாக வைத்திருந்த ஒரு கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும் ரூ.5,100 ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, மூன்று பேரையும் செல்வபுரம் போலீஸாா் கைது செய்தனா்.

குனியமுத்தூரில்...

கோவை குளத்துப்பாளையம் பி.கே.புதூா், சோப் கம்பெனி சாலை அருகே உள்ள காலி மைதானத்தில் போதைப்பொருள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், குனியமுத்தூா் காவல் ஆய்வாளா் கண்ணையன் தலைமையிலான போலீஸாா் அங்கு சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ஆா்.எஸ்.புரம் காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான ஸ்ரீதா் (24) என்பவா் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 1.05 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் ஸ்ரீதரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.