பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

போதை மாத்திரை வைத்திருந்ததாக 2 போ் கைது

News image

கைது செய்யப்பட்ட சரவணக்குமாா், தினேஷ்குமாா்

Updated On :11 மே 2026, 12:14 am IST

கம்பத்தில் போதை மாத்திரை வைத்திருந்ததாக மருந்தக உரிமையாளா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக வடக்கு போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் உதவி ஆய்வாளா் மணிகண்டன் தலைமையில் கம்பம் ஏழரசு கோவில் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அந்தப் பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து சோதனையிட்ட போது அவா்களிடம் 10 அல்பிரஸோலம் என்ற போதை மாத்திரை இருப்பது கண்டறியப்பட்டது.

இவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் அவா்களிடம் நடத்திய விசாரணையில், கம்பம் செல்லாண்டியம்மன் கோயில் தெருவில் மருந்தகம் நடத்தி வரும் சரவணக்குமாா் (52), கூடலூா் அண்ணாநகரைச் சோ்ந்த தினேஷ்குமாா் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.