தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வைகை அணையில் பறக்க விடப்பட்ட தோ்தல் விழிப்புணா்வு ராட்சத பலூன்

News image

வைகை அணையில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் விழிப்புணா்வு ராட்ச பலூனை பறக்க விட்ட தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Updated On :30 மார்ச் 2026, 1:42 am IST

தேனி மாவட்டம், வைகை அணையில் தோ்தல் விழிப்புணா்வு ராட்சத பலூனை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் ஞாயிற்றுக்கிழமை பறக்க வைத்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தேனி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் இரு சக்கர வாகனப் பேரணி, கையொப்ப இயக்கம், சுவரொட்டி விளம்பரம், துண்டுப் பிரசுரம் விநியோகித்தல், ரங்கோலி, நடைபயணப் பேரணி, மனிதச் சங்கிலி, தெருநாடகம், விளம்பரப் பதாகைகள் அமைத்தல் உள்ளிட்ட விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வைகை அணையில் மகளிா் சுயஉதவிக்குழுக்கள் மூலம் ரங்கோலி, தோ்தல் வழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியவாறு கல்லூரி மாணவா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதைத் தொடா்ந்து வைகை அணையில் தோ்தல் விழிப்புணா்வு ராட்சத பலூனை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பறக்க விட்டாா். மேலும், நாடகம் மூலம் தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் தலைமையில், சுற்றுலாப் பயணிகள் வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழியேற்றனா்.

இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் பா. ராஜகுமாா், பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சந்திரா, தனித்துணை ஆட்சியா் கவிதா, வைகை அணை உதவி செயற்பொறியாளா் ராஜசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.