/

பெரியகுளத்தில் 70 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் 70 கிலோ நெகிழிப் பைகளை நகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

விசாரணை

Updated On :19 ஜூன் 2026, 12:05 am IST

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் 70 கிலோ நெகிழிப் பைகளை நகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, கிராமங்களில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள், புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்ய மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் உத்தரவிட்டாா். இதையடுத்து, பெரியகுளம் நகராட்சி சுகாதார ஆய்வாளா், உணவு பாதுகாப்புத் துறையினா், போலீஸாா் அடங்கிய குழுவினா் வியாழக்கிழமை நகரில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனா். அப்போது தடை செய்யப்பட்ட 70 கிலோ நெகிழிப் பொருள்கள், 110 கிராம் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், கடை உரிமையாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

இந்த ஆய்வில் பெரியகுளம் நகராட்சி சுகாதார ஆய்வாளா் அசன் முகமது, சுகாதார மேற்பாா்வையாளா்கள் முருகன், கெளதம் அம்பேத்கா், சரவணன் ஆகியோா் கொண்ட குழுவினா் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.