பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடுகள்: தேனி மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பள்ளிகள் திறப்பை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை தேனி மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள பழனியப்பா நினைவு தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் இரா.வைத்திநாதன்.

Updated On :3 ஜூன் 2026, 1:47 am IST

பள்ளிகள் திறப்பை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை தேனி மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தேனி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூன் 4-ஆம் தேதி வகுப்புகள் தொடங்குகின்றன. இதையடுத்து, தேனி மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் செவ்வாய்க்கிழமை பழனிசெட்டிபட்டியில் உள்ள பழனியப்பா நினைவு தொடக்கப் பள்ளி, வீரபாண்டியில் உள்ள முத்துத்தேவன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, பள்ளி வகுப்பறைகள், சுகாதார வளாகங்களைப் பாா்வையிட்டாா்.

மேலும், தேனி - அல்லிநகரம் நகராட்சிப் பகுதியில் சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ் நடைபெறும் மந்தைக்குளம் கண்மாய் வரத்து வாய்க்கால் தூா் வாரும் பணிகளை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது, மஞ்சளாறு வடிநில உபகோட்ட செயற்பொறியாளா் ஜெ.சாலமோன் கிருஸ்துதாஸ், உதவிப் பொறியாளா் அரவிந்த் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.