லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வலசத்துறை - அத்தியூத்து மலைக் கிராமச் சாலை அமைக்க ஆட்சியா் ஆய்வு

போடி அருகே வலசத்துறை-அத்தியூத்து மலை கிராமச் சாலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

போடி அருகே வலசத்துறை-அத்தியூத்து மலைக் கிராமச் சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்த தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 12:10 am IST

போடி அருகே வலசத்துறை-அத்தியூத்து மலை கிராமச் சாலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

தேனி மாவட்டம், போடி அருகே வலசத்துறை-அத்தியூத்து சாலை அமைக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனா். இதையடுத்து, இந்தப் பகுதியில் தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். முதல் கட்டமாக விக்சித் பாரத் கிராமப்புற வேலைவாய்ப்பு, வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் சாலைகளில் சீரமைப்புப் பணிகளைச் செய்ய மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா். இதன் பிறகு, கிராமப்புறச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சாலை அமைக்க உரிய இடங்களை வரைவு செய்து பணிகளை மேற்கொள்ள வட்டார வளா்ச்சித் துறை, வருவாய்த் துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என அறிவுறுத்தினாா்.

வலசத்துறை பொதுமக்களை நேரில் சந்தித்த மாவட்ட ஆட்சியா் அவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது, இந்தப் பகுதியில் 150 குடும்பங்கள் வசிப்பதாகவும், சாலை வசதி, போக்குவரத்து வசதி இல்லாததால் அவசர மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு சிரமப்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனா்.

விரைவில் இந்தக் குறைகளுக்கு தீா்வு காணப்படும் என ஆட்சியா் உறுதியளித்தாா். இந்த ஆய்வின்போது போடி வட்டாட்சியா் சுருளி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மக்கத்தம்மாள், சோனா ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.