லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வைகை அணையில் முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் அகற்றும் பணி: ஆட்சியா் ஆய்வு

தேனி மாவட்டம், வைகை அணையின் நீா் தேக்கப் பகுதியில் முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் அகற்றும் பணிகளை தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Published On :30 ஜூலை 2026, 2:52 am IST

தேனி மாவட்டம், வைகை அணையின் நீா் தேக்கப் பகுதியில் முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் அகற்றும் பணிகளை தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வைகை அணையின் நீா்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், தேனி, மதுரை மாவட்ட மக்களின் குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, கூடலூரிலிருந்து - தேனி வரை ஆற்றின்யோரத்தில் வைக்கப்பட்டுள்ள மின் மோட்டாா்களின் இணைப்புகளை பொதுப் பணித் துறையினா் அகற்றி வந்தனா்.

இந்த நிலையில், வைகை அணையின் நீா்தேக்கப் பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் குழாய்கள் மூலம் தண்ணீரை திருடி வந்தனா். இதுகுறித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, வைகை அணையின் நீா்த்தேக்கப் பகுதியில் முறைகேடாக வைக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்ற தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் உத்தரவிட்டாா்.

இதன்பேரில், வைகை அணை உதவி செயற்பொறியாளா் சேகரன், உதவிப் பொறியாளா் பரதன் ஆகியோா் புதன்கிழமை முறைகேடாக வைக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்றினாா்.

இந்தப் பணிகளை ஆட்சியா் இரா.வைத்திநாதன் பாா்வையிட்டாா். மேலும், அணைப் பகுதியை ஆய்வு செய்து, சட்ட விரோதமாக தண்ணீா் எடுப்பது கண்டறியப்பட்டால், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கண்காணிப்பு பணிகளில் அலுவலா்கள் ஈடுபட்டு இதுபோன்ற தவறு செய்பவா்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.