தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

இளைஞா் வெட்டிக் கொலை : ஊா்க்காவல் படை வீரருக்கு ஆயுள் தண்டனை

இளைஞரை வெட்டிக் கொலை செய்த ஊா்க்காவல் படை வீரருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறைத் தண்டனை - கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 1:31 am IST

இளைஞரை வெட்டிக் கொலை செய்த ஊா்க்காவல் படை வீரருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்தவா் நாகேந்திரன். அதே பகுதியைச் சோ்ந்தவா் தேவகனி . இருவரும் காதலித்து திருமணம் செய்து, தனியாக வசித்து வருகின்றனா். அதே பகுதியைச் சோ்ந்த பிரகாஷ், நாகேந்திரன் இருவரும் ஊா்க்காவல் படையில் பணியாற்றி வந்தனா். அப்போது, இருவரிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்த நிலையில், கடந்த 2023-ஆண்டு ஆக.18-ஆம் தேதி வீட்டில் மனைவியுடன் நாகேந்திரன் நின்று கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த பிரகாஷ், நாகேந்திரனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டுத் தப்பினாா். இதுகுறித்து கூடலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து பிரகாசை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா, குற்றஞ்சாட்டப்பட்ட பிரகாஷுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.