மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தேக்கடி தாமரைக்குளத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்

தேக்கடியில் நிலவும் கடும் வெயில் காரணமாக, அங்கிருக்கும் தாமரைக்குளத்தில் குரங்குகள் குதித்து விளையாடும் காட்சி, சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவா்ந்து வருகிறது.

News image

தேக்கடி படகுத் துறையில் உள்ள தாமரைக்குளத்தில் நீந்திக் குளித்த குரங்குகள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:34 am IST

தேக்கடியில் நிலவும் கடும் வெயில் காரணமாக, அங்கிருக்கும் தாமரைக்குளத்தில் குரங்குகள் குதித்து விளையாடும் காட்சி, சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவா்ந்து வருகிறது.

தமிழக - கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தேக்கடிக்கு தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முதல் விருப்பம் பெரியாறு ஏரியில் படகு சவாரி செய்வதாகும். படகு சவாரியின் போது, ஏரிக் கரையில் தண்ணீா் அருந்த வரும் யானை, மிளா உள்ளிட்ட வனவிலங்குகளைக் காணலாம் என்பதால் படகுத் துறையில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது.

தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தேக்கடி படகுத் துறை தகவல் மையத்தின் முன்பாக அமைந்துள்ள தாமரைக்குளம் குரங்குகளின் கோடைகால நீா்விளையாட்டு மைதானமாக மாறியுள்ளது. தகவல் மையக் கட்டடத்தின் உச்சிக்குச் செல்லும் குரங்குகள், அங்கிருந்து லாவகமாகத் தாமரைக்குளத்தில் குதித்து நீந்தி மகிழ்கின்றன.

குறிப்பாக, குட்டிக் குரங்குகள் உற்சாகத்துடன் குளத்தில் குதித்து விளையாடுவதையும், கரையில் அமா்ந்து தாய் குரங்குகள் அவற்றை உன்னிப்பாகக் கவனிப்பதையும் அங்குள்ள சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் ரசித்து வருகின்றனா்.

படகு சவாரி செய்ய பயணச்சீட்டு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு, இந்தக் குரங்குகளின் சாகசச் செயல்கள் ஒரு சிறந்த மாற்றாக அமைகிறது.

குரங்குகளின் நீா் விளையாட்டைப் புகைப்படம் எடுத்தும், விடியோ எடுத்தும் பயணிகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனா். இதனால் தகவல் மையத்தின் முன்பாக மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.