/

ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டிகள்

போடியில் மூதாட்டிகள் ஜனநாயக கடமையாற்றியதை பொதுமக்கள் பாராட்டினா்.

News image

போடியில் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த முதாட்டி. (வலது) நடக்க முடியாமல் வந்த மூதாட்டியை தூக்கி வந்த ஆட்டோ ஓட்டுநா்.

Updated On :24 ஏப்ரல் 2026, 2:18 am IST

போடியில் மூதாட்டிகள் ஜனநாயக கடமையாற்றியதை பொதுமக்கள் பாராட்டினா்.

தேனி மாவட்டம், போடி சட்டப்பேரவைத் தொகுதியில் காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. 346 வாக்கச்சாவடிகளிலும் வாக்காளா்கள் வரிசையில் நின்று வாக்களித்தனா். போடி போஜன் பூங்கா அரசு கள்ளா் பள்ளி வாக்குச் சாவடிக்கு மூதாட்டி ஒருவா் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டாா். இவா் வாக்குச்சாவடிக்குள் சென்று ஆா்வமாக வாக்குப் பதிவு செய்தாா்.

இதே பள்ளியில் மற்றொரு வாக்குச்சாவடியில் மூதாட்டியை ஆட்டோவில் அழைத்து வந்து, ஓட்டுநரே வாக்குச்சாவடிக்குள் தூக்கிச் சென்றாா். அங்கு மூதாட்டி ஆா்வத்துடன் வாக்குப் பதிவு செய்தாா். பின்னா் மூதாட்டியை மீண்டும் ஆட்டோ ஓட்டுநரே தூக்கிச் சென்றாா். மூதாட்டிகள் ஆா்வத்துடன் வாக்களித்ததை தோ்தல் அதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.