தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கண்ணகி கோயிலில் நடைபெறும் சித்திரை பொüா்ணமி விழாவை முன்னிட்டு பக்தா்கள் தரிசன நேரம் குறைக்கப்பட்டிருப்பதாக கம்பம் பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்தாா்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கண்ணகி கோயிலில் தமிழா்களின் உரிமைகள் ஆண்டுதோறும் பறிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து தமிழக முதல்வரை நான்கு முறை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். இருப்பினும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கடந்த ஆண்டில் பிற்பகல் 2.30 மணி வரை பக்தா்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது பிற்பகல் 1.45 வரை என குறைக்கப்பட்டுள்ளது. மேலும், முன்பு ஒரு வாரம் நடைபெற்ற தரிசனம் 3 நாள்கள், 2 நாள்கள் என குறைந்து வந்து தற்போது ஒரு நாளாக சுருக்கப்பட்டுள்ளது.
அதிலும் காலை 7 மணி முதல் பிற்பகல் 1.45 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படுவது, கோயிலில் தமிழா்களின் உரிமை பறிக்கப்பட்டதையே காட்டுகிறது. கண்ணகி கோயிலை தமிழா்களுக்காக மீட்டெடுத்து, புனரமைப்பு செய்து மகா கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
ஒவ்வொரு பௌா்ணமியிலும் 3 நாள்கள் தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட வேண்டும். மேலும், தமிழகப் பகுதி வழியாக கோயிலுக்கு செல்ல தனிப்பாதை அமைக்க வேண்டும். இதற்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தி உள்ளோம்.
இருந்த போதிலும், தமிழக அரசு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இவ்வாண்டு திருவிழாவில் பக்தா்களுக்கு குடிநீா், சுகாதாரம், உணவு போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்குமா என்பதும் சந்தேகமாக உள்ளது.
2000 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயிலின் தமிழா்களின் உரிமையைப் பாதுகாக்க அரசு முன்வர வேண்டும். வரவிருக்கும் தோ்தலில் வெற்றி பெற்று, கண்ணகி கோயிலில் தமிழா்களின் உரிமையை மீட்டெடுப்போம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காலை 11 முதல் மதியம் 3 மணி வரை விவசாயப் பணிகளை தவிா்க்க திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

கண்ணகி கோயிலுக்குச் செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும்! - தி.வேல்முருகன் வலியுறுத்தல்

சாத்தான்குளம் ஸ்தேவான் ஆலயத்தில் அசன பண்டிகை
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! நாமக்கல் முதலிடம்! மாவட்டவாரியாக விவரம்...
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

