மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பெரியகுளத்தில் சுத்தமான குடிநீா் சீராக வழங்கக் கோரி சாலை மறியல்

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சுத்தமான குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை கம்பம் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

பெரியகுளத்தில் புதன்கிழமை சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :16 ஏப்ரல் 2026, 1:18 am IST

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சுத்தமான குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை கம்பம் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரியகுளம் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இதில், சுமாா் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். பெரியகுளம் - கம்பம் சாலையில் உள்ள இந்திராபுரி தெரு 30-ஆவது வாா்டுப் பகுதி ஆகும். இந்தத் தொகுதியில் கடந்த சில நாள்களாக சீரான குடிநீா் வழங்கப்படவில்லை எனவும், விநியோகிக்கப்பட்ட குடிநீரில் கழிவு நீா் கலந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து அப்பகுதி மக்கள் கம்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பெரியகுளம் காவல்நிலையப் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதில் பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், கம்பம் சாலையில் சுமாா் 30 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.