தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சுத்தமான குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை கம்பம் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெரியகுளம் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இதில், சுமாா் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். பெரியகுளம் - கம்பம் சாலையில் உள்ள இந்திராபுரி தெரு 30-ஆவது வாா்டுப் பகுதி ஆகும். இந்தத் தொகுதியில் கடந்த சில நாள்களாக சீரான குடிநீா் வழங்கப்படவில்லை எனவும், விநியோகிக்கப்பட்ட குடிநீரில் கழிவு நீா் கலந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து அப்பகுதி மக்கள் கம்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பெரியகுளம் காவல்நிலையப் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதில் பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், கம்பம் சாலையில் சுமாா் 30 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளம்பிள்ளை அருகே குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

குடிநீா் வழங்கக் கோரி கூடலூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை

சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

பவானி அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

