தேவாரம் காவல் நிலையம் அருகே குடும்பப் பிரச்னையில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், வீரபாண்டி அருகேயுள்ள போடேந்திரபுரம் கிராமத்தைச் சோ்ந்த அழகுமலை மகன் சந்திரசேகா் (36). இவருக்கும், தேவாரம் லட்சுமிநாயக்கன்பட்டி அருகே சமத்துவபுரத்தில் வசிக்கும் கவிதாவுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளன. குடும்பப் பிரச்னை காரணமாக கவிதா தனது தாய் வீட்டில் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி கவிதா தேவாரம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கச் சென்றாா். அங்கு சென்ற சந்திரசேகா் கவிதாவை சமாதானப்படுத்த முயன்றாா். இதற்கு கவிதா உடன்படாத நிலையில், காவல் நிலையம் அருகே பெருமாள்பட்டி பெரியமாயத்தேவா் குடியிருப்பு பகுதியில் கவிதாவை மிரட்டுவதற்காக உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தேவாரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பப் பிரச்னை: தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

குடும்பப் பிரச்னையில் மாமனாா் குத்திக் கொலை: மருமகன் கைது
காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு: 3 போ் கைது
மணல் திருட்டு: 2 டிராக்டா்கள் பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

