தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

News image

தேனி கருவேல் நாயக்கன்பட்டி கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்த தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:27 am IST

தேனி மாவட்டம் கருவேல் நாயக்கன்பட்டி கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன வளாகத்தில் கையொப்ப இயக்கத்தை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் இரு சக்கர வாகனப் பேரணி, கையொப்ப இயக்கம், சுவரொட்டி விளம்பரம், துண்டுப் பிரசுரம் விநியோகித்தல், ரங்கோலி, நடைபயணப் பேரணி, மனிதச் சங்கிலி, தெரு நாடகம், விளம்பரப் பதாகைகள் அமைத்தல் உள்ளிட்ட விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இந்த விழிப்புணா்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதன்படி, தேனி கருவேல்நாயக்கன்பட்டி கனரா வங்கி பயிற்சி நிறுவன வளாகத்தில் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கையொப்ப இயக்கத்தை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தாா்.

முன்னதாக முதல் தலைமுறை வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மேலும், வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய செல்ஃபி பாய்ண்ட்-இல் வாக்காளா்கள் சுய படம் எடுத்துக் கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜகுமாா், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சந்திரா, முன்னோடி வங்கி மேலாளா் காா்த்திகேயன், தேனி வட்டாட்சியா் சதீஷ்குமாா், கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குநா் ரவிக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.