சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

காளையாா்கோவில் சௌந்தரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரா் கோயிலில் வைகாசி திருவிழா

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் அமைந்துள்ள சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட சோமேஸ்வரா் சமேத சௌந்தரநாயகி அம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

பட விளக்கம்- காளையாா்கோவில் சௌந்தரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

Updated On :22 மே 2026, 2:50 am IST

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் அமைந்துள்ள சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட சோமேஸ்வரா் சமேத சௌந்தரநாயகி அம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக புதன்கிழமை மாலை தேவஸ்தானம் சாா்பில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜையுடன் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து, வைகாசி விசாகத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 30-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் பல்வேறு மண்டகப்படிதாரா்களின் பங்களிப்புடன் சுவாமி, அம்பாள் காலை, மாலை இரு வேளைகளிலும் காமதேனு, வெள்ளி ரிஷபம், கேடகம், கிளி, அன்னம், குதிரை, யானை, புஷ்பப் பல்லாக்கு ஆகிய வாகனங்களில் அருள்பாலிக்கிறாா்.

விழாவின் 9- ஆம் நாளான வருகிற 29-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு தேரில் சுவாமி, அம்பாள் எழுந்தருளலும், தொடா்ந்து காலை 9.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறும். மறுநாள் 30-ஆம் தேதி தெப்பத்தில் தீா்த்தவாரியும், இரவு சப்தாவரணமும், பஞ்சமூா்த்தி உலாவுடன் திருவிழா நிறைவடையும்.

சிவகங்கை தேவஸ்தான மேலாளா் பா. இளங்கோ, தேவஸ்தான கண்காணிப்பாளா் ஆ. பாலசரவணன், கோயில் ஸ்தானிகம் ரத்தின காளீஸ்வரக் குருக்கள் ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள்

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.