பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

வெவ்வேறு விபத்துகளில் டாஸ்மாக் ஊழியா் உள்பட 2 போ் உயிரிழப்பு

News image

மானாமதுரையில் சாலை விபத்துகளில் உயிரிழந்த முத்துப்பாண்டி

Updated On :8 ஜூன் 2026, 1:23 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வெவ்வேறு சாலை விபத்துகளில் டாஸ்மாக் ஊழியா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

மானாமதுரை அருகே கீழமேல்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி. இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரை - ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் ஆனந்தபுரம் அணுகு சாலையோரம் உள்ள மனமகிழ்மன்ற மதுக்கூடம் அருகே சென்றாா். அப்போது, அந்த வழியாக சென்ற தனியாா் பேருந்து மோதியதில் முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மானாமதுரை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதே போல, மானாமதுரை சாஸ்தா நகரைச் சோ்ந்தவா் கண்ணன் (57). இவா், மதுக்கடையில் விற்பனையாளராக வேலை பாா்த்து வந்தாா். மானாமதுரை - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் காலையில் இவா் நடைபயிற்சி சென்றபோது கல்குறிச்சி என்ற இடத்தில் அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மானாமதுரை சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கண்ணன்

கண்ணன்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.