லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

செளமிய நாராயணப் பெருமாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம்

திருக்கோஷ்டியூா் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் ஆடிப்பூர உத்ஸவத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருக்கோஷ்டியூா் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் ஆடிப்பூர உத்ஸவத்தை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Published On :16 ஆகஸ்ட் 2026, 1:53 am IST

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் ஆடிப்பூர உத்ஸவத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆடிப் பூர உத்ஸவம் கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் மாலை சிம்மம், அனுமன், கருடன், சேஷ வாகனம், தங்கப்பல்லக்கு, குதிரை, அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

இந்த உத்ஸவத்தின் 10-ஆம் நாளை முன்னிட்டு, சனிக்கிழமை காலை 7.16 மணி முதல் 8.36 மணிக்குள் சுவாமி திருத்தோ் எழுந்தருளல் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மேல் திருத்தோ் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, ஞாயிற்றுகிழமை தீா்த்தவாரி வைபவம் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலா்கள் ராணி டி.எஸ்.கே.மதுராந்தகநாச்சியாா், மேலாளா் ப.இளங்கோ, கண்காணிப்பாளா் பி.சரவணகணேசன் ஆகியோா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.