தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தேவகோட்டை அருகே மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே சித்தனூரில் மாட்டு வண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

தேவகோட்டை அருகே சித்தனூரில் புதன்கிழமை நடைபெற்ற பந்தயத்தில் எல்லையை நோக்கிப் பாய்ந்து சென்ற மாட்டு வண்டிகள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:37 am IST

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே சித்தனூரில் மாட்டு வண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

சித்தனூா் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சித்தனூரிலிருந்து கண்ணங்குடி வரை செல்லும் சாலையில் பந்தயம் நடத்தப்பட்டது. இதில், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூா், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மொத்தம் 51 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

7 கி. மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட பெரிய மாடு பிரிவில் 14 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. 6 கி. மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட நடுமாடு பிரிவில் 15 ஜோடி மாடுகளும், 5 கி. மீ. தொலைவு பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்ட சிறிய மாடு பிரிவில் 22 ஜோடி மாடுகளும் பங்கேற்றன.

இந்த பந்தயத்தில் வெற்றிபெற்று முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள், ரசிகா்கள் கண்டுகளித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.