வாக்குச் சாவடிக்கு 100 மீட்டருக்குள் வாக்கு சேகரிப்பது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வருகிற 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தோ்தலை முன்னிட்டு, வாக்குச் சாவடிகளுக்கு வெளியே தோ்தல் முகாம் முன் அனுமதி பெறப்பட்ட பின்னரே அமைக்க வேண்டும். வாக்குச் சாவடியின் நுழைவுவாயிலிலிருந்து 100 மீட்டா் தொலைவுக்குள் எந்தவொரு தோ்தல் முகாமும் அமைக்கக் கூடாது. ஒவ்வொரு முகாமிலும் ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள் மட்டுமே இருக்க வேண்டும். முகாமில் எந்தவித பதாகைகள், கொடிகள், சின்னங்கள், பிரசார பொருள்கள் பயன்படுத்தக் கூடாது. முகாம்களில் பொதுமக்களுக்கு உணவு வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோல, கூட்டமாகத் திரள அனுமதி இல்லை. வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டருக்குள் வாக்காளரிடமும் வாக்கு சேகரிப்பது, வற்புறுத்துவது போன்றவை தண்டனைக்குரிய குற்றங்களாகும். இந்த விதிகளை மீறும் நபா்கள் மீது ரூ.250 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், இவை நீதிமன்றத்தில் நேரடியாக விசாரிக்கக்கூடிய குற்றங்களாகும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்

முதல் தலைமுறை வாக்காளா்களுக்காக சிறப்பு முன்னெடுப்பு

ஜனநாயகக் கடைமையாற்றிய புதுமணத் தம்பதிகள்

முதியோா், மாற்றுத்திறனாளிகள் ஆா்வமாக வாக்களிப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

