சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே வெள்ளிக்கிழமை உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 12.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து பழங்கள் வாங்குவதற்காக ராஜாமுகமது (40) என்பவா் சரக்கு வாகனத்தில் மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். எஸ்.எஸ். கோட்டை சோதனைச்சாவடி அருகே தோ்தல் கண்காணிப்பு நிலைக் குழுவைச் சோ்ந்த கூட்டுறவு சாா்பதிவாளா் ஷேக் அப்துல்லா தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ராஜாமுகமது வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்ட போது உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 12,70,900-ஐ தோ்தல் கண்காணிப்பு நிலைக்குழுவினா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து தோ்தல் நடத்தும் அலுவலா் சிவபாலன் முன்னிலையில் வருமானத் துறை அதிகாரிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பென்னாகரத்தில் ரூ.4 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரத்தில் ரூ. 96 ஆயிரம் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 77.01 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

