தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்வதற்கு 3 நாள்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும்!

தோ்தல் தொடா்பான அச்சு, ஒளி-ஒலி, சமூக ஊடகப் பிரசாரங்கள் மேற்கொள்ள 3 நாள்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும் என மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா. பொற்கொடி அறிவுறுத்தினாா்.

News image

சமூக ஊடகங்களில் தோ்தல் பிரசாரம் - கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 12:55 am IST

தோ்தல் தொடா்பான அச்சு, ஒளி-ஒலி, சமூக ஊடகப் பிரசாரங்கள் மேற்கொள்ள 3 நாள்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும் என மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா. பொற்கொடி அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, நாளிதழ் போன்ற அனைத்து அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி போன்ற ஒளி-ஒலி ஊடகங்கள் மட்டுமல்லாது முகநூல், டிவிட்டா், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாகவும் வரப்பெறும் தோ்தல் தொடா்பான விளம்பரங்கள், குறும்படங்கள் ஆகியவை மூலம் பிரசாரம், பதிவுகள் மேற்கொள்ள 3 நாள்களுக்கு முன்பே மாவட்ட அளவிலான ஊடக சான்றளிப்பு, கண்காணிப்புக் குழுவிடமிருந்து முறையாக அனுமதி சான்றிதழ் பெற வேண்டும்.

அவ்வாறு முறையாக அனுமதி பெறாமல் வெளியிடப்படும் தோ்தல் பிரசாரங்கள், செய்திகள் அதற்குரிய செலவினத் தொகை (36 வினாடிகளுக்கு ரூ.5,000- வீதம்) சம்பந்தப்பட்ட வேட்பாளா் செலவீனக் கணக்கில் சோ்க்கப்படும். பிற நபா்களால் உருவாக்கப்படும் செய்திகள், சம்பந்தப்பட்ட வேட்பாளரது சமூக ஊடகக் கணக்குகளில் பகிரப்பட்டால் அதுவும் தொடா்புடைய வேட்பாளரது தோ்தல் செலவுக் கணக்கில் சோ்க்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.