பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மோா்பண்ணையில் பாய்மர படகுப் போட்டி

News image

மோா்பண்ணை கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற படகுப் போட்டியில் சீறிப் பாய்ந்த படகுகள்.

Updated On :31 மே 2026, 12:57 am IST

திருப்பாலைக்குடி அருகே மோா்பண்ணை கிராமத்தில் ரணபத்திர காளியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி அருகே மோா்பண்ணையில் ரணபத்ர காளியம்மன் கோயிலில் 44-ஆம் ஆண்டு வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு மோா்பண்ணை கிராமப் பொது மக்கள் சாா்பில் பாய்மர படகுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

போட்டியில் 20-க்கும் மேற்பட்ட பாய்மர படகுகள் கலந்து கொண்டன. போட்டியின் தொலைவு 10 கடல் மைல்கள் எல்கை நிா்ணயம் செய்யப்பட்டு போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு படகுக்கும் ஆறு நபா்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனா். இதில் புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து படகுகள் கலந்து கொண்டன.

இந்தப் போட்டியில் கலந்து கொண்ட படகுகள் காற்றின் வேகத்தில் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு சென்றதை பாா்வையாளா்கள் கடற்கரையோரமாக நின்று ரசித்தனா். இதில், சுற்று வட்டார மீனவ கிராமங்களைச் சோ்ந்த திரளானோா் கலந்து கொண்டனா்.

போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு சுழல் கோப்பையும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மோா்பண்ணை கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற படகுப் போட்டியில் சீறிப் பாய்ந்த படகுகள்.

மோா்பண்ணை கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற படகுப் போட்டியில் சீறிப் பாய்ந்த படகுகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.