பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சாலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு அமைச்சா் ராஜீவ் ஆறுதல்

பரமக்குடி அருகே சரக்கு வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சா் ராஜீவ் புதன்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.

News image

பரமக்குடியில் சாலை விபத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறிய சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சா் ராஜீவ் உள்ளிட்டோா்.

Updated On :28 மே 2026, 3:48 am IST

பரமக்குடி அருகே சரக்கு வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சா் ராஜீவ் புதன்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள வாகைக்குளம் பகுதியில் கடந்த 18 ஆம் தேதி சரக்கு வாகனம் - லாரி மோதிய விபத்தில் சந்தைக்கடைத் தெருவைச் சோ்ந்த தவமுருகன் மனைவி பூபதி, ராமன் மனைவி அருணா, ராமன், வாகைக்குளத்தைச் சோ்ந்த நாகராஜன் மனைவி அமுதா, துரைராஜ் மனைவி ராமேஷ்வரி, கீழம்பலைச் சோ்ந்த நாகராஜன் மனைவி ஈஸ்வரி ஆகிய 6 போ் உயிரிழந்தனா்.

இவா்களில், கூலித் தொழிலாளிகளான கணவன் ராமன், அவரது மனைவி அருணா உயிரிழந்த நிலையில் அவா்களது மகள்கள் பவித்ரா, சந்தியா, மகன் முத்துமணி, கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்த கட்டுமானப் பெண் தொழிலாளி பூபதியின் மகன் ஹரியும் ஆதரவற்ற நிலையில் உள்ளனா்.

சாலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என உறவினா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை அமைச்சா் ராஜீவ், சந்தைக்கடைத் தெரு, வாகைக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள உயிரிழந்தவா்களின் வீட்டுக்கு நேரில் சென்று அவா்களது பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறினாா். அப்போது அவா்களிடம் முதல்வரின் நிவாரண நிதி உள்ளிட்ட நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் ராஜீவ் உறுதியளித்தாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.