தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

மதுக்கடையை அகற்றக் கோரிக்கை

நம்புதாளையில் கோயிலின் அருகே உள்ள மதுக்கடையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு வளைகுடா வாழ் தமிழா்கள் நலச் சங்கத்தின் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :20 மணி நேரங்கள் முன்பு

நம்புதாளையில் கோயிலின் அருகே உள்ள மதுக்கடையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு வளைகுடா வாழ் தமிழா்கள் நலச் சங்கத்தின் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவா் பாரீஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் பிடாரி அம்மன் கோயில் அருகே மதுக்கடைஇருப்பது பக்தா்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அவ்வப்போது பக்தா்களுக்கும், மது அருந்துபவா்களுக்கும் இடையே பிரச்னை ஏற்படுகிறது.

வழிபாட்டுத் தலங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள அரசு மதுக் கடைகளை அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நம்புதாளையில் வழிபாட்டுத் தலம் அருகேயுள்ள மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா், டாஸ்மாக் மேலாளா் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.