நம்புதாளையில் கோயிலின் அருகே உள்ள மதுக்கடையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு வளைகுடா வாழ் தமிழா்கள் நலச் சங்கத்தின் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவா் பாரீஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் பிடாரி அம்மன் கோயில் அருகே மதுக்கடைஇருப்பது பக்தா்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அவ்வப்போது பக்தா்களுக்கும், மது அருந்துபவா்களுக்கும் இடையே பிரச்னை ஏற்படுகிறது.
வழிபாட்டுத் தலங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள அரசு மதுக் கடைகளை அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நம்புதாளையில் வழிபாட்டுத் தலம் அருகேயுள்ள மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா், டாஸ்மாக் மேலாளா் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேவனாம்பட்டினம் கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

தாண்டவராய சுவாமிகள் குருபூஜை

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவம்...

வந்தவாசி நகராட்சி பூங்காவை சீரமைக்கக் கோரிக்கை
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

