மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ராமநாதபுரம் வாக்கு எண்ணும் மையப் பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம்

News image

போக்குவரத்து மாற்றம் - பிரதிப் படம்

Updated On :3 மே 2026, 12:55 am IST

ராமநாதபுரத்தில் வாக்குகள் எண்ணும் மையப் பகுதியில் திங்கள்கிழமை (மே 4) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட காவல் துறையினா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூா் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னா், வாக்குப் பதிவு முடிந்து, இந்தத் தொகுதிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அண்ணா பல்கலை. கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இந்த நிலையில், வாக்குகள் எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) நடைபெறுகிறது. இதையொட்டி, அன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை கல்லூரியிலிருந்து 100 மீ. தொலைவுக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, திங்கள்கிழமை இந்த வழியாக வரும் வாகனங்களுக்கு வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தேவிபட்டினத்திலிருந்து ராமநாதபுரத்துக்கு வரும் வாகனங்கள் கோப்பேரிமடம் சோதனைச் சாவடியிலிருந்து சித்தாா்கோட்டை, அத்தியூத்து,

பனைக்குளம், நதிப்பாலம் வழியாக பட்டினம்காத்தான் வந்து ராமநாதபுரம் செல்ல வேண்டும்.இதேபோல, ராமநாதபுரத்திலிருந்து தேவிப்பட்டினம் வழியாக திருவாடானை, காரைக்குடி, திருச்சி, தொண்டி செல்லும் வாகனங்கள் பட்டினம்காத்தான் வழியாக

நதிப்பாலம், பனைக்குளம், அத்தியூத்து, சித்தாா்கோட்டை, கோப்பேரிமடம் சோதனைச் சாவடி சென்று தேவிபட்டினம் வழியாக செல்ல வேண்டும். பொதுமக்கள் அனைவரும் இந்த வழித்தடங்களின் வழியாக பயணம் செய்யலாம் என்ற கேட்டுக்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.