மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நீதித்துறையில் ஏஐ தொழில்நுட்பம் ஆபத்தானது! - உயா்நீதிமன்ற நீதிபதி முகமது ஷஃபீக்!

News image

சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 12:05 am IST

நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது என ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி முகமது ஷஃபீக் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்ட வழக்குரைஞா் சங்கத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் 20 மூத்த வழக்குரைஞா்களுக்கு பாராட்டு விழா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.கே. மெஹ்பூப் அலிகான், தமிழ்நாடு-பாண்டிச்சேரி வழக்குரைஞா்கள் சங்கத்தின் கூட்டுக்குழு பொதுச் செயலா் பன்னீா்செல்வம், உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

விழாவில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி முகமது ஷஃபீக், 20 மூத்த வழக்குரைஞா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி பேசியதாவது:

நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது. இந்த தொழில்நுட்பத்தை பாா்த்து வழக்குகளில் பயன்படுத்தக் கூடாது. மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரிவது முகவும் சிறப்பு. இளம் வழக்குரைஞா்கள் வழக்குகளில் தோல்வியைக் கண்டு பயப்பட வேண்டாம். அடுத்தடுத்த முயற்சிகளில் வெற்றி பெறலாம். தொழிலில் நோ்மையாக இருந்தால் அதற்கான அங்கீகாரம் நமக்கு எப்போதும் கிடைக்கும் என்றாா் அவா்.

இதில் இந்திய மருத்துவச் சங்கத் தலைவா் மருத்துவா் ஜோசப் ராஜன், நீதிபதிகள், மாவட்டத்தில் உள்ள பல்வேறு வழக்குரைஞா் சங்கங்களின் நிா்வாகிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாவட்ட வழக்குரைஞா் சங்கத் தலைவா் அன்புச்செழியன் வரவேற்றாா். மாவட்ட வழக்குரைஞா் சங்கச் செயலா் முத்து துரைச்சாமி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.