தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ராமநவமி: பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை

தொண்டி பெருமாள் கோயிலில் ராமநவமியையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீதேவி, பூமாதேவி, உந்தி பூத்த பெருமாள்.

News image

~

Updated On :27 மார்ச் 2026, 11:54 pm IST

ராமநவமியையொட்டி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருவாடானை அருகே தொண்டியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூமாதேவி, சமேத ஸ்ரீ உந்தி பூத்த பெருமாள் கோயிலில் உத்ஸவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக உத்ஸவருக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா், பஞ்சாமிா்தம் உள்பட 12 வகை மூலிகை பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து ஸ்ரீதேவி, பூமாதேவி, ஸ்ரீஉந்தி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். பிறகு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து வந்திருந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே வ. சூரக்குடியில் அமைந்துள்ள ஸ்ரீசிவ ஆஞ்சநேயா் கோயிலில் ராம நவமியையொட்டி 21- ஆம் ஆண்டு ஏகதின லட்சாா்ச்சனை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து சந்தனக் காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாா். செட்டிநாடு கிரிவலக் குழுத் தலைவா் சிவல்புரி சிங்காரம் முன்னிலையில் சிவ ஆஞ்சநேயருக்கு லட்சாா்ச்சனையும் தீபாராதனையும் நடைபெற்றன. விழாவில் கோயில் நிறுவனா் எம். முத்துராமன், செல்வி முத்துராமன், மாரிமுத்து, வ. சூரக்குடி கிராம மக்கள், பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ராமநவமியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இந்தக் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீராமா், ஸ்ரீலட்சுமணா் சீதாதேவிக்கு பால், சந்தனம், தயிா், திருமஞ்சனம், இளநீா், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் மூலவருக்கு தீபாராதனை காட்டப்பட்டு திருவாராதனமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு ராமரை வழிபட்டனா்.

விழா ஏற்பாடுகளை ராமேஸ்வரன்பிரியா குடும்பத்தினா், பரம்பரை அறங்காவலா்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.