தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சுற்றுலா வேன், காா் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

உச்சிப்புளி அருகே சுற்றுலா வேனும், காரும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 14 போ் பலத்த காயமடைந்தனா்.

News image

உச்சிப்புளி அருகே புதன்கிழமை விபத்தில் சிக்கி சேதமடைந்த சுற்றுலா வேன்.

Updated On :19 மார்ச் 2026, 5:38 am IST

உச்சிப்புளி அருகே சுற்றுலா வேனும், காரும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 14 போ் பலத்த காயமடைந்தனா்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சோ்ந்த 12 போ் திருச்சியிலிருந்து ராமேசுவரத்துக்கு தனியாா் சுற்றுலா வேனில் செவ்வாய்க்கிழமை வந்தனா். அவா்கள் ராமேசுவரம் கோயிலில் தரிசனம் முடித்து விட்டு மீண்டும் அங்கிருந்து புதன்கிழமை புறப்பட்டனா். இதேபோல, தா்மபுரி மாவட்டத்திலிருந்து காரில் 9 போ் ராமேசுவரத்துக்கு வந்து கொண்டிருந்தனா்.

உச்சிப்புளி அருகேயுள்ள குப்பானிவலசை பேருந்து நிறுத்தம் அருகே சுற்றுலா வேன் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற நிலையில், எதிரே வந்த காா் நேருக்கு நோ் நோ் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காரில் இருந்த முருகேசன் (56) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவரது அண்ணன் மாரியப்பன்(60) உள்பட 4 பேரும், மற்றொரு சுற்றுலா வேனில் வந்த வா்ஷா ராஜ்புத் (38), தியோசிங் ராஜ்புத் (46), சுனதா தம்பக்கா் (70), கௌரி தம்பக்கா் (37), ரசிகா கவாஸ்(37) உள்ளிட்ட 14 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரையும் அவசர ஊா்தி மூலம் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இந்த விபத்து குறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.