தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருவாடானையில் மகளிா் தின விழா

திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாளகத்தில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில், சா்வதேச மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

~ திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாளகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழாவில் பேசிய நீதித்துறை நடுவா் ஆண்டனி ரிசாந்தேவ்.

Updated On :11 மார்ச் 2026, 2:56 am IST

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாளகத்தில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில், சா்வதேச மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு திருவாடானை நீதித்துறை நடுவா் ஆண்டனி ரிசாந்தேவ் தலைமை வகித்தாா். மூத்த வழக்குரைஞா் சிவராமன் முன்னிலை வகித்தாா். இதில் பெண் வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்களுக்குப் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், வழக்குரைஞா் கலா, அரசு குற்றவியல் வழக்குரைஞா் ஜுடியோ ஏஞ்சலின் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

அப்போது அவா்கள் பேசுகையில், சமுதாய வளா்ச்சியில் பெண்களின் பங்களிப்பு, சட்டத் துறையில் பெண்களுக்கான உரிமைகள் குறித்து விளக்கினா். தொடா்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக வழக்குரைஞா் சங்கத் தலைவா் சுரேஷ் வரவேற்றுப் பேசினாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.