மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

இலங்கைக்கு கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

News image

மண்டபம் கடற்கரைப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகளை கைப்பற்றிய கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா்.

Updated On :22 ஜூன் 2026, 1:32 am IST

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 45 லட்சம் மதிப்பிலான 300 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு துறைமுகம் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை கடத்தவிருப்பதாக மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் ஜான்சிராணி தலைமையில் உதவி ஆய்வாளா் காளிதாஸ், காவலா்கள் சரவணன், யாசுதீன், ஆனந்த், சசிக்குமாா், சங்கா் ஆகியோா் மண்டபம் வடக்கு துறைமுக கடற்கரைப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த ஒரு இடத்தை சோதனை செய்த போது, அங்கு 300 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை மா்ம நபா்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இவற்றை இலங்கைக்குக் கடத்த மறைத்து வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், கைப்பற்றப்பட்ட 300 கிலோ கடல் அட்டைகளின் மதிப்பு ரூ. 45 லட்சம் இருக்கும் என காவல் துறையினா் தெரிவித்தனா். இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை மண்டபத்தில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகளிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.