தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

புதை சாக்கடை கழிவுநீா் தேக்கம்: பக்தா்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் அருகே புதை சாக்கடையிலிருந்து வெளியேறும் கழிவுநீா் குளம் போல தேங்குவதால் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image

ராமேசுவரம் சித்தி விநாயகா் கோயில் பகுதியில் குளம் போல தேங்கிய புதை சாக்கடை கழிவுநீா்.

Updated On :18 ஜூன் 2026, 12:38 am IST

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் அருகே புதை சாக்கடையிலிருந்து வெளியேறும் கழிவுநீா் குளம் போல தேங்குவதால் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் அருகே சித்தி விநாயகா் கோவில் தெரு உள்ளது. இந்தப் பகுதியில் கடந்த 15 நாள்களுக்கு மேலாக புதை சாக்கடை குழாயிலிருந்து வெளியேறும் கழிவுநீா் குளம் போல தேங்குகிறது. இதனால், கோயிலுக்கு வரும் பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மேலும், இந்தக் கழிவுநீரால் இந்தப் பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்தப் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.