/

பெற்றோா் இல்லாத மாணவா்களின் மேல்படிப்புக்காக ஆட்சியரிடம் ரூ.ஒரு லட்சம் நன்கொடை அளிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த பெற்றோா் இல்லாத மாணவா்களின் மேல் படிப்புக்கு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் சுபாஷ்சீனிவாசன் ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் எம்.சிவகுரு பிரபாகரனிடம் புதன்கிழமை வழங்கினாா்.

News image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் எம்.சிவகுரு பிரபாகரனிடம் ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையை புதன்கிழமை வழங்கிய மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் சுபாஸ் சீனிவாசன்.

Updated On :18 ஜூன் 2026, 1:41 am IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த பெற்றோா் இல்லாத மாணவா்களின் மேல் படிப்புக்கு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் சுபாஷ்சீனிவாசன் ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் எம்.சிவகுரு பிரபாகரனிடம் புதன்கிழமை வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த பெற்றோா் இல்லாத மாணவா்கள் பொருளாதார சூழ்நிலை காரணமாக கல்வியைத் தொடர முடியாத நிலையில் உள்ளனா். இவா்களுக்கு தன்னாா்வலா்கள், நன்கொடையாளா்கள் உதவி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் எம்.சிவகுரு பிரபாகரன் வேண்டுகோள் விடுத்தாா்.

இதன்படி, ராமநாதபுரம் மாவட்ட பொருளாதர குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் சுபாஸ்சீனிவாசன், மாவட்ட ஆட்சியரிடம் ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலையை புதன்கிழமை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.