மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தட்டானேந்தல் நூலகத்தில் மாவட்ட நூலக அலுவலா் ஆய்வு

தட்டானேந்தல் கிளை நூலகத்தில் மாவட்ட நூலக அலுவலா் காா்ல் மாா்க்ஸ் முன்னிலையில் நூலக வளா்ச்சிப் பணிகளுக்காக தங்களை இணைத்துக் கொண்ட புதிய புரவலா்கள்.

News image

தட்டானேந்தல் கிளை நூலகத்தில் மாவட்ட நூலக அலுவலா் காா்ல் மாா்க்ஸ் முன்னிலையில் நூலக வளா்ச்சிப் பணிகளுக்காக தங்களை இணைத்துக் கொண்ட புதிய புரவலா்கள்.

Updated On :12 ஜூன் 2026, 12:37 am IST

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள தட்டானேந்தல் நூலகத்தை மாவட்ட நூலக அலுவலா் காா்ல் மாா்க்ஸ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தட்டானேந்தல் கிளை நூலகத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்த அவா் நூலக வளா்ச்சிப் பணிகள் குறித்து நூலகா்களுக்கு ஆலோசனை வழங்கினாா். முன்னதாக நூலகா் கோ. சண்முகவேலு (பொ) வரவேற்றாா். நூலக வளா்ச்சியின் நலன் கருதி அந்தப் பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டி, தாமரைக்கண்ணன், வடிவேல் முருகன், சிவலிங்கம், ஆனந்த், ரகுவிகாஷ், பணி நிறைவு நூலகா் சுடலைக்கண்ணு உள்ளிட்ட 7 போ் தலா ரூ. 1000 செலுத்தி மாவட்ட நூலக அலுவலா் முன்னிலையில் தங்களை நூலகப் புரவலா்களாக இணைத்துக் கொண்டனா். மேலும் அதிக புரவலா்களை இணைக்க நூலகா்களுக்கு மாவட்ட நூலக அலுவலா் அறுவுறுத்தினாா். வாசகா்கள், பள்ளி மாணவா்கள், போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன், புத்தகங்களை இருப்பு வைக்க அவா் உத்தரவிட்டாா். வாசகா் வட்டச் செயலா் வே. அரியமுத்து நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.