பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பள்ளம் தோண்டிய போது குழாய் சேதமடைந்து வெளியேறிய இயற்கை எரிவாயு!

ராமநாதபுரத்தில் சாலையோரம் மரக்கன்று நடுவதற்காக சனிக்கிழமை பள்ளம் தோண்டிய போது பூமியில் புதைக்கப்பட்டிருந்த இயற்கை எரிவாயு குழாய் உடைந்து எரிவாயு வெளியேறியது.

News image

ராமநாதபுரத்தில் பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருந்த இயற்கை எரிவாயு குழாய் சேதமடைந்ததால் வெளியேறிய எரிவாயு.

Updated On :7 ஜூன் 2026, 12:54 am IST

ராமநாதபுரத்தில் சாலையோரம் மரக்கன்று நடுவதற்காக சனிக்கிழமை பள்ளம் தோண்டிய போது பூமியில் புதைக்கப்பட்டிருந்த இயற்கை எரிவாயு குழாய் உடைந்து எரிவாயு வெளியேறியது.

ராமநாதபுரம்- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பாரதிநகா் பேருந்து நிறுத்தம் அருகே சாலை விரிவாக்கப் பணி நடைபெறவுள்ள நிலையில், சாலையோர மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இதற்குப் பதிலாக புதிய மரக்கன்றுகளை நடவு செய்யும் பணி நடைபெறுகிறது.

இந்த நிலையில், புதிய மரக்கன்றுகளை நடவு செய்வதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையோரம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது, பாரதிநகா் 6- ஆவது தெரு பகுதியில் பள்ளம் தோண்டிய போது, அங்கு பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த இயற்கை எரிவாயு குழாய் சேதமடைந்து எரிவாயு வெளியேறத் தொடங்கியது. இதனால் தீ விபத்து ஏற்படும் என்பதால் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு நிறுத்தப்பட்டன. மேலும் போலீஸாா் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, தனியாா் இயற்கை எரிவாயு நிறுவன பணியாளா்கள் அங்கு வந்து பிரதான எரிவாயு குழாய் பாதையின் இணைப்பைத் துண்டித்தனா்.

மேலும், சேதமடைந்த குழாயைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். இயற்கை எரிவாயு குழாயை சேதப்படுத்திய பொக்லைன் இயந்திர வாகன ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.