கமுதியில் அமைந்துள்ள புனித அந்தோணியாா் தேவாலய திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக சிறப்பு வழிபாட்டுக்குப் பிறகு புனித அந்தோணியாா் உருவம் பொறித்த கொடி பவனியாக தேவாலயத்தைச் சுற்றி மேளதாளம், வாண வேடிக்கைகளுடன் கொண்டு வரப்பட்டது. பிறகு கொடி மரத்தில் கமுதி பங்குத்தந்தை அம்புரோஸ் லூயிஸ் கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தாா். அருள்பணியாளா் சிரில் (தில்லியில் உள்ள இந்திய சமூக நிறுவன இயக்குநா்) திருப்பலி நிறைவேற்றினாா். இந்த கொடியேற்று விழாவில் திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா். வருகிற 12-ஆம் தேதி புனித அந்தோணியாா், புனித சவேரியாா், புனித செபஸ்தியாா், புனித மைக்கேல் அதிதூதா் சொரூபங்கள் அலங்கரிக்கப்பட்ட தோ்களில் கமுதி முக்கிய வீதிகள் வழியாக பவனியாக கொண்டு வரப்படுகின்றன. மறுநாள் 13-ஆம் தேதி அந்தோணியாா் தெரு, சவேரியாா் தெரு பகுதிகளில் தோ்ப் பவனி நடைபெறும். 14-ஆம் தேதி கா்த்தநாதசுவாமி நினைவு அசன வைபவம் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை பரத உறவின் முறையினா் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேல்நரியப்பனூரில் 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு

பாவூா்சத்திரம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

கரிமேடு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

புனித சூசையப்பா் தேவாலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

