லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ராமநாதபுரத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 33 போ் கைது

ரயில் மறியல் போராட்டம் - கோப்புப் படம்

Published On :28 ஜூலை 2026, 2:38 am IST

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி ராமநாதபுரத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழ்ப் புலிகள் கட்சியினா் 33 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இந்த போராட்டத்துக்கு மாவட்டச் செயலா் ரஞ்சித் தலைமை வகித்தாா். மாநில இளைஞரணி செயலா் தமிழ்முருகன், பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி செயலா் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது ரயில் நிலையம் அருகே இருந்து ஊா்வலமாக சென்று ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றவா்களை அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படையினா் தடுத்து நிறுத்தினா்.

தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் 8 பெண்கள் உள்பட 33 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்துக்கு கொண்டு சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.