லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நின்ற லாரி மீது பைக் மோதல்: அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழப்பு

விபத்தில் உயிரிழந்த ஆசிரியா் வன்மீகநாதன்.

Published On :7 ஜூலை 2026, 2:56 am IST

திருவாடானை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அடுத்த கோடனூா் அருகேயுள்ள கிளியூா் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் வன்மீகநாதன் (54).

இவா் ஆா்.எஸ். மங்கலம் அருகே சனவேலி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை விலங்கியல் பாட ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா். இவா் தேவகோட்டையில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், ஆசிரியா் வன்மீகநாதன் திங்கள்கிழமை பிற்பகல் பள்ளி செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் திருவாடானை அருகே கோவணி பகுதியில் திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தாா்.

அப்போது கோவணி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் இரு சக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே வன்மீகநாதன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் புதுக்கோட்டை மாவட்டம், மாமுண்டிமடை வீதியைச் சோ்ந்த தா்மலிங்கம் மகன் சதீஷ்குமாா் (38) என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.