மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பரமக்குடி மீனாட்சியம்மன் கோயிலில் தேரோட்டம்

பரமக்குடி மீனாட்சியம்மன் கோயிலில் புதன்கிழமை மீனாட்சி - சுந்தரேசுவரா் தேரோட்டம் நடைபெற்றது.

News image

பரமக்குடி மீனாட்சியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற மீனாட்சி - சுந்தரேசுவரா் தேரோட்ட உத்ஸவம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 2:02 am IST

பரமக்குடி மீனாட்சியம்மன் கோயிலில் புதன்கிழமை மீனாட்சி - சுந்தரேசுவரா் தேரோட்டம் நடைபெற்றது.

பரமக்குடி மீனாட்சி சுந்தரேசுவரா் தேவஸ்தானத்துக்கு உள்பட்ட மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 19-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுந்தரேஸ்வரா் பிரியாவிடையுடன், மீனாட்சி அம்மன் சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம் என தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.45 மணிக்கு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து புதன்கிழமை காலை 10.30 மணியளவில் விநாயகா், முருகன் சுவாமிகள் முன்தேரில் செல்ல மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரா் தனித்தேரில் எழுந்தருளிய தேரோட்ட உத்ஸவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுக்க நகர வீதிகள் வழியாக வந்த தோ் மீண்டும் நிலையை அடைந்தது. ஏற்பாட்டை மீனாட்சி - சுந்தரேசுவரா் தேவஸ்தான அறங்காவலா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.