மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சென்னை-ராமேசுவரம் வந்தே பாரத் ரயில் சேவையை விரைந்து தொடங்கக் கோரிக்கை

சென்னை-ராமேசுவரம் வந்தே பாரத் ரயில் சேவையை பொதுமக்களின் நலன் கருதி விரைந்து தொடங்க வேண்டும் என பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினா் ஏ.ஜே. ஆலம் தெரிவித்தாா்.

News image

வந்தே பாரத் ரயில் - கோப்புப்படம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 2:01 am IST

சென்னை-ராமேசுவரம் வந்தே பாரத் ரயில் சேவையை பொதுமக்களின் நலன் கருதி விரைந்து தொடங்க வேண்டும் என பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினா் ஏ.ஜே. ஆலம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் அளித்த மனுவில் தெரிவித்ததாவது:

சென்னை-ராமேசுவரம் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சா் தெரிவித்தாா். ஆனால், இதுவரை அந்த ரயில் சேவை தொடங்கப்படவில்லை. ஆனால், இதற்கு பிறகு அறிவித்த பல்வேறு நகரங்களுக்குச் செல்லும் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகின்றன.

தென் தமிழகத்தில் ராமேசுவரத்துக்கு வெளிமாநிலத்தைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்தப் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான வந்தே பாரத் ரயில் சேவையை இயக்க மத்திய ரயில்வே துறை ஒப்புதல் அளித்தும் இன்னும் இயக்கப்படாமல் காலதாமதம் செய்து வருகின்றனா்.

இந்தப் பகுதி மக்கள் பகலில் சென்னை சென்று வரும் வகையில், வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என கால அட்டவனை வெளியானது.

எனவே, ராமநாதபுரம் மாவட்ட மக்களும், வெளிமாநிலப் பக்தா்களும், சுற்றுலாப் பயணிகளும் பயன்பெறும் வகையில், உடனடியாக வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.