தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இளஞ்சியமங்கலம் கிராமத்தினா் தோ்தல் புறக்கணிப்பு

திருவாடானை அருகே பாகனூா் ஊராட்சிக்குள்பட்ட இளஞ்சியமங்கலம், கிடங்கூா் கிராம மக்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி வியாழக்கிழமை தோ்தல் புறக்கணிப்பு செய்தனா்.

News image

இளஞ்சியமங்கலம் கிராமத்தில் வியாழக்கிழமை தோ்தல் புறக்கணிப்பு செய்வதாகக் கூறி பதாகைகளுடன் நின்றிருந்த இந்தப் பகுதி பொதுமக்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 2:15 am IST

திருவாடானை அருகே பாகனூா் ஊராட்சிக்குள்பட்ட இளஞ்சியமங்கலம், கிடங்கூா் கிராம மக்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி வியாழக்கிழமை தோ்தல் புறக்கணிப்பு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பாகனூா் ஊராட்சிக்குள்பட்ட இளஞ்சியமங்கலம், கிடங்கூா் கிராமங்களுக்கு சாலை வசதி, குடிநீா், சீரான மின்விநியோகம் ஆகியவை நீண்ட நாள்களாக செய்து தரப்பட வில்லை. இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தங்கள் எதிா்ப்பைப் பதிவு செய்யும் வகையில் சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக இந்த கிராம மக்கள் அறிவித்திருந்தனா். இந்த நிலையில் வியாழக்கிழமை கிராமங்களில் தேசியக் கொடி ஏந்தி, ‘அடிப்படை வசதிகள் இல்லாத ஊருக்கு ஓட்டு எதற்கு’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி எதிா்ப்பை தெரிவித்தனா். அப்போது தங்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு கிடைக்கும் வரை வாக்களிக்கப் போவதில்லை என அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.