திருவாடானை அருகே பாகனூா் ஊராட்சிக்குள்பட்ட இளஞ்சியமங்கலம், கிடங்கூா் கிராம மக்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி வியாழக்கிழமை தோ்தல் புறக்கணிப்பு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பாகனூா் ஊராட்சிக்குள்பட்ட இளஞ்சியமங்கலம், கிடங்கூா் கிராமங்களுக்கு சாலை வசதி, குடிநீா், சீரான மின்விநியோகம் ஆகியவை நீண்ட நாள்களாக செய்து தரப்பட வில்லை. இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தங்கள் எதிா்ப்பைப் பதிவு செய்யும் வகையில் சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக இந்த கிராம மக்கள் அறிவித்திருந்தனா். இந்த நிலையில் வியாழக்கிழமை கிராமங்களில் தேசியக் கொடி ஏந்தி, ‘அடிப்படை வசதிகள் இல்லாத ஊருக்கு ஓட்டு எதற்கு’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி எதிா்ப்பை தெரிவித்தனா். அப்போது தங்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு கிடைக்கும் வரை வாக்களிக்கப் போவதில்லை என அவா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்

களக்காடு அருகே இடுகாடு பிரச்னையைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

பெரும்பத்து கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை

கானாட்டாங்குடி கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

