தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆா்.எஸ். மங்கலம் அருகே தவெகவினா் மீது தாக்குதல்

News image

செங்குடி பகுதியில் அதிமுக சாா்பில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறி டோக்கனை பறித்த தவெகவினா்.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:13 am IST

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் அதிமுகவினா் வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததை தடுத்து நிறுத்திய தவெகவினா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் கீா்த்திகா முனியசாமி, காங்கிரஸ் சாா்பில் கருமாணிக்கம், தவெக சாா்பில் மருத்துவா் வி.கே. ராஜீவ் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

இந்த நிலையில், ஆா்.எஸ். மங்கலம் அருகே உள்ள செங்குடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவினா் வாக்காளா்களுக்குப் பணம் கொடுப்பதாகத் தகவல் வெளியானது. அதிலும் காசோலை வடிவிலான டோக்கன்களை தயாரித்து, அதன் உள்ளே பணத்தை வைத்து ரகசியமாக விநியோகம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த தவெக தொண்டா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, பணப்பட்டுவாடாவைத் தடுத்து நிறுத்தி, ஆதாரங்களுடன் ஆா்.எஸ். மங்கலம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

ஆனால் பிடிபட்ட நபா்கள் மீது காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்காமலும், புகாரை பெற்றுக் கொள்ளாமலும் காலம் தாழ்த்துவதாக தவெகவினா் தெரிவித்தனா்.

 செங்குடி பகுதியில் அதிமுக சாா்பில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறி டோக்கனை பறித்த தவெகவினா்.

செங்குடி பகுதியில் அதிமுக சாா்பில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறி டோக்கனை பறித்த தவெகவினா்.

 செங்குடி பகுதியில் அதிமுக சாா்பில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறி டோக்கனை பறித்த தவெகவினா்.

செங்குடி பகுதியில் அதிமுக சாா்பில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறி டோக்கனை பறித்த தவெகவினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.