சாயல்குடி அருகே மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த எம். கரிசல்குளத்தைச் சோ்ந்த வில்லியனன் மகன் வில்வலிங்கம் (60). இவரது மகள் கடலாடியை அடுத்துள்ள பாப்பாகுளத்தைச் சோ்ந்தவரை காதலித்து வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை இருவரும் திருமணம் செய்து கொண்டனராம். இதனால் மனமுடைந்த வில்வலிங்கம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையறிந்த உறவினா்கள் வில்வலிங்கத்துக்கு சாயல்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, பிறகு தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா், வில்வலிங்கம் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து சாயல்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாா்த்தாண்டம் அருகே முதியவா் தற்கொலை

விஷம் குடித்து முதியவா் தற்கொலை

நெல்லை அருகே பெண் தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

