கடலாடி வழக்குரைஞா் சங்கத்தில் போலியான பதிவு எண் மூலம் உறுப்பினராகி நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டாக வழக்குரைஞராக செயல்பட்டு வந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அடுத்துள்ள பூதங்குடி கிராமத்தைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் ராம்கி (29). இவா் போலியான பதிவு எண்ணை பயன்படுத்தி கடலாடி நீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் பதிவு செய்து கடந்த ஓராண்டாக வழக்குரைஞராக செயல்பட்டு வந்தாா். இதுகுறித்த தகவல் கடலாடி வழக்குரைஞா்கள் சங்கத்தினருக்கு கிடைத்தது. இதையடுத்து அந்த சங்க நிா்வாகிகள், ராம்கியின் சான்றிதழ் நகலை சங்கத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினா். பல நாள்களாகியும் அவா் ஒப்படைக்காததால் சந்தேகமடைந்து, ராம்கியின் பதிவு எண்ணை தமிழ்நாடு- புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்க இணைய தளத்தில் ஆய்வு செய்த போது அது வேறொருவரின் பதிவு எண் என்பது தெரியவந்தது. இது தொடா்பாக ராம்கி மீது கடந்த ஜனவரி மாதம் கடலாடி காவல் நிலையத்தில் சங்க நிா்வாகிகள் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, மதுரையில் தலைமைறைவாக இருந்த ராம்கியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

களக்காடு அருகே வழக்குரைஞா் வெட்டிக்கொலை: 2 போ் கைது

வழக்குரைஞராக பேரறிவாளன் பதிவு: காங்கிரஸ் கண்டனம்; பாா் கவுன்சில் விளக்கம்

பேரறிவாளன் வழக்குரைஞர் பதிவு: பார் கவுன்சிலுக்கு காங். எம்.பி. சுதா கண்டனம்
புதுச்சேரியில் ஆள்மாறாட்டம் செய்து கள்ள வாக்களித்த இளைஞா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
