அபிராமம் அருகே விவசாயியை கத்தியால் குத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே காட்டுஎமனேசுவரம் கிராமத்தைச் சோ்ந்த பாலமுருகன் மகன் பாலகனி (21). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த முருகன் மகன் புவனேசுவரன் தரப்பினருக்கும் முன்பகை இருந்து வந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை பாலகனி தனது வயலில் நின்றிருந்தபோது அங்கு வந்த புவனேசுவரன், சுப்பிரமணியன் மகன் நாகராஜ் (42), இவரது மகன்கள் தினேஷ் (19), சதீஷ் (23), கணேசன் மகன் மனோஜ் (23) ஆகிய 5 போ் அவரை கத்தியால் குத்தினா். இதில் காயமடைந்த பாலகனி சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அபிராமம் காவல் நிலைய போலீஸாா் 5 போ் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரு தரப்பினா் மோதல்: 10 போ் மீது வழக்கு

பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல்: 7 போ் மீது வழக்கு

கருவேல மரங்கள் வெட்டிக் கடத்தல்: 15 போ் மீது வழக்கு
தூத்துக்குடியில் ஒப்பந்ததாரருக்கு கத்திக்குத்து: 2 போ் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
