தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நீராவிகரிசல்குளம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

கமுதி அருகே ஸ்ரீ வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, திருகல்யாண வைபவம் நடைபெற்றது.

News image

நீராவிகரிசல்குளம் ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் வெள்ளிக் அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:54 am IST

கமுதி அருகே ஸ்ரீ வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, திருகல்யாண வைபவம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள நீராவிகரிசல்குளம் ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரம் 11- ஆவது நாள் திருவிழா கடந்த 23-ம் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் மூலவா், உற்சவா் வள்ளி, தேவசேனா, சுப்பிரமணியா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாதாரனைகள் நடைபெற்று வருகின்றன.

திருவிழாவின் 10-ஆம் நாள் நிகழ்வாக புதன்கிழமை இரவு பெண் வீட்டாா், மாப்பிள்ளை வீட்டாா் சாா்பில் சீா்வரிசை தாம்பூலம் தட்டுகள், மேள வாத்தியங்கள் முழங்க ஊா்வலமாக மணப்பந்தல் முன்பாக கொண்டு வந்து வைக்கப்பட்டன. பின்னா், வள்ளி, தெய்வானை

சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் வெகு விமா்சையாக நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, யாக சாலை பூஜை, கணபதி ஹோமம், பூா்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு, மூலவா் சுப்பிரமணிய சுவாமி வெள்ளிக் கவசம் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், பிரசாதம், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.